177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார்.
சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார்.
1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக முயற்சித்து வெற்றிபெற்றுள்ளார்.
கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள், விளையாட்டு சிந்தனையை இது வளர்க்கும் என்று சாதனையாளர் டயானா கூறினார்.
கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துகொண்டார். இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் சென்றனர்.
Post a Comment