சித்தாண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் யானை தாக்கியதில் சித்தாண்டியைச்
சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று காலையில் சித்தாண்டி -
உதயன்மூலையைச் சேர்ந்த ஓர் இளைஞனையும், மாலைவேளையில் சித்தாண்டி -03 ஐச்
சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளது.
நேற்று பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகளுடன் யானைவெடிமூலம் யானைகளைக்
கலைத்துச்சென்று கொண்டிருந்த வேளையிலேயே சித்தாண்டி -03 ஐச் சேர்ந்த
ஆசீர்வாதம் என்பவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

Post a Comment