Headlines News :
Home » » இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு: நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரிக்கை

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு: நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரிக்கை

Written By Unknown on Sunday, October 6, 2013 | 9:26 AM

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு: நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க, இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த மாற்றம் காரணமாக அதிகளவிலான நிலநடுக்கத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info