Headlines News :
Home » » உதயகுமாரின் அதிரடி நடவடிக்கை மட்டக்களப்பு மாநகரம்தூய்மையாகின்றது.

உதயகுமாரின் அதிரடி நடவடிக்கை மட்டக்களப்பு மாநகரம்தூய்மையாகின்றது.

Written By sakara on Sunday, January 5, 2014 | 9:27 PM

மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை வர­லாற்றில் முதன் முறை­யாக நேற்று முதல் தூய்மை வாரம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த முதலாம் திகதி புதி­தாக பத­வி­யேற்ற மாந­கர ஆணை­யாளர் மாணிக்கம் உத­ய­கு­மாரின் வழி­காட்­டலில் வாராந்தம் தூய்மை வாரம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.
வாராந்தம் இரு மணி நேரம் மாந­கர சபையின் சகல ஊழி­யர்­க­ளையும் பயன்­ப­டுத்தி மாந­கர சபைக்­குட்­பட்ட ஒரு பகுதி முழு­மை­யாக தூய்­மைப்­ப­டுத்­தப்­படும் என மாந­கர ஆணை­யாளர் தெரி­வித்தார்.
இத்­திட்­டத்தின் கீழ் நேற்று முத­லா­வது தூய்­மைப்­ப­டுத்தல் நிகழ்வு மட்­டக்­க­ளப்பு மாந­கர பகு­தியில் இடம்­பெற்­றது.
சுமார் 150 மாந­கர சபை ஊழி­யர்கள் இதில் பங்கு கொண்­டனர். 15 இற்கும் அதி­க­மான வாக­னங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.
மாந­கர பொறி­யி­ய­லா­ளர்கள், சுகா­தார மேற்­பார்­வை­யா­ளர்கள், பொது சுகா­தார பரி­சோ­த­கர்கள், நகர சுத்தி தொழி­லா­ளர்கள் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்­து­கொண்­டனர்.
நீண்ட நாட்­க­ளாக தூய்­மைப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருந்த வடி­கான்­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்த மணல் அள்­ளப்­பட்டு தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்­டன. நகரத்தின் மத்தியில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு தூய்மை யாக்கப்பட்டமை குறி ப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info