Headlines News :
Home » » இந்தியப் பெருங்கடலில் மலேசிய விமானம்: நஜீப்

இந்தியப் பெருங்கடலில் மலேசிய விமானம்: நஜீப்

Written By Exams on Monday, March 24, 2014 | 7:53 AM

மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து, மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை மாலை (மலேசிய நேரம் இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.

நஜிப் கூறியதாவது:-

“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info