Headlines News :
Home » » மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பிக்க அனுமதி

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பிக்க அனுமதி

Written By Exams on Monday, April 21, 2014 | 12:11 AM

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கு தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. 

இக்கற்கை நெறியினை மேற்கொள்வதற்கு சிவில் ஆய்வுகூடம் அவசியமாக தேவைப்படுகின்ற காரணத்தினால் இதற்கான கோரிக்கை அடங்கிய மகஜர் அண்மையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எம்.எம் சார்ள்ஸ் அவர்களிடம் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இதற்கான ஒழுங்கமைப்பினை மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபர் ச.தியாகராசாவினால் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது சிவில் ஆய்வுகூடம் அமைப்பதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info