Headlines News :
Home » » வரலாற்றில் முஸ்லிம் பெண்ணும் இராணுவத்தில் மட்டக்களப்கைச்சேர்ந்த பிரிகேடியர் ரமேஸ் பிரதம அதிதி

வரலாற்றில் முஸ்லிம் பெண்ணும் இராணுவத்தில் மட்டக்களப்கைச்சேர்ந்த பிரிகேடியர் ரமேஸ் பிரதம அதிதி

Written By Exams on Sunday, August 24, 2014 | 6:30 PM

0
கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் யுவதியொருவர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தில் இணைந்துள்ளார்.
அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில்  நடைபெற்றது.
இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இராணுவ வீராங்கணைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் 16 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும், அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவு செய்துள்ளனர்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info