மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பெற்றி இன் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளருமான சமூக சேவையாளர் எம்.செல்வராஜாவின் முயற்சியினால் தேசிய முதலீட்டுச்சபை மற்றும் சுற்றுலா சபை என்பவற்றின் அனுமதியுடன் சகல வசதிகளுடனும் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் தேனிலவு அறை மற்றும் சொகுசு அறை, உல்லாச அறை, மேம்படுத்தப்பட்ட அறை, குடும் அறை என பல்வேறு வகைகளைக்கொண்ட 45 அறைகள் உள்ளன.
நீச்சல் தடாகம், மற்றும் திருமண மண்டபம், என்பவற்றுடன் புதிய தொழிநுட்பங்களுடனான உள்ளக கூட்ட மண்டம் என்பவைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பின் இயற்கை அழகைக் கொண்ட வாவியின் ஓரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்ந ஹோட்டலின் வெளி மற்றும் சுற்றுப்புறச் சூழல் இயற்கை அழகும் பசுமை நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு வரலாற்றில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலை திறந்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment