Headlines News :
Home » , » ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு காரியாலயம் மட்டக்களப்பில் திறப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு காரியாலயம் மட்டக்களப்பில் திறப்பு

Written By Exams on Tuesday, September 10, 2013 | 5:20 AM

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மாகாணங்கள் ரீதியாக விஸ்தரிக்கும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண அலுவலகமொன்று இன்று செய்வாய்க்கிழமை மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அங்கீகாரத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் ஐ.நா.அபிவிருத்தி உதவித் திட்டத்தில் இம்மாகாண அலுவலகம் மட்டக்களப்பு நகரில் மண்முனை வடக்குபிரதேச செயலக மேல்மாடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார, தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்க, அத்திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.நசீர்;; மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் பீ.எஸ்.எஸ்.சார்ள்ஸ்;, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன் உட்பட தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மதகுருமார்கள் அரச அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இம்மாகாண அலுவலகம் ஊடாக கிழக்கு மாகாண மக்கள் இதுவரைகாலமும் இத்திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்தில் முடித்துக் கொண்ட கருமங்களை இம்மாகாணஅலுவலகம் இலகுவாக வழங்குமென்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பயனளிக்கும்.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொது மக்களின் தவல்கள் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் கொழும்பில் அமைந்துள்ள ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்படுவதன் மூலம் அங்கிருந்து தேசிய அடையாள அட்டைகள் இரு வாரகாலதிற்குள் வழங்கப்பட்டுவரும் அடையாள அட்டைகளை, ஒருவாரகாலத்திற்குள் இம்மாகாண அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info