உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கட்டாரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்தவுடன் ,உறவினர்கள் மிகவும் அவசரமாக இவரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுவளையில்தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிசார் இன்று மாலை பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்து,பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
கட்டாரில் இப்பெண்ணின் கணவரோடு மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தொடர்பை ஏற்படுத்திய போது இதனை உறுதிப்படுத்தினார்.
நாளை பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.







Post a Comment