இவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கின்றமைக்கு குறிப்பாக மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றமைக்கு சில நல்ல உள்ளங்களும் முன்வந்து உள்ளன.
தாய்நாடு செய்தியை வாசித்த விநாயகமூர்த்தி விஜய் என்கிற அன்பர் பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் ஆற்றாமையை கவிதையாக பதிவு செய்து சென்று உள்ளார். படித்துப் பாருங்கள்.
எட்டு திசையும்
தொட்டு சென்ற
குரல் ,,,
விட்டு போனதும்
விழிகள் தேடிய
முகம் ,,,
மெல்லிய ஓசையில்
மேனி சிலுக்க வைக்கும்
தமிழ் ,,,
மாலை பொழுதில்
மனங்களில்
மாளிகை கொள்ளும்
மங்கை நீங்கள் ,,,,,
சோகங்கள் நெருங்க
சோர்வும் உங்களில்
தொடர ,,,
கூடிய கூட்டமெல்லாம்
கூடு விட்டு பிரிய ,,,,
கவலையும் கண்ணீரும்
உங்களில் காண ,,,
கஷ்டமா உள்ளது
கமலினி அக்காவுக்கா இது என்று ,,,,,,
Post a Comment