Headlines News :
Home » » பேஸ்புக்கை தடை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம்

பேஸ்புக்கை தடை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம்

Written By sakara on Sunday, February 23, 2014 | 6:47 AM

பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆபாச இணைய தளங்களை முடக்குவதற்கு ஏற்கனவே தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேஸ்புக் பயன்படுத்திய மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் கருத்திற் கொண்டு பேஸ் புக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info