உலக வங்கியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடாத்திய கணீப்பீட்டின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட ஆரையம்பதி பிரதேசசபைக்கு நினைவுக்கேடயமும் 50இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசினை ஆரையம்பதி பிரதேசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டி.பி.விஜயசுந்தரவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக புறநெகும வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் மக்கள் சிறந்த பயனை அடைவைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தியமையை கருத்தில்கொண்டு இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
Post a Comment