Headlines News :
Home » » மட் .வின்சென்ற் தேசிய பாடசாலை கிழக்கு மாகாணத்தில் சாதனை

மட் .வின்சென்ற் தேசிய பாடசாலை கிழக்கு மாகாணத்தில் சாதனை

Written By Exams on Tuesday, April 8, 2014 | 8:51 PM

மட் வின்சென்ற் தேசிய பாடசாலை கடந்த க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அதிகளவிலானோர் சித்தி பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலே ஒரே தடவையில் அதிகளவிலான மாணவர்கள் விஷேட சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி-கனகசிங்கம் தெரிவித்தார்.

வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 18 மாணவர்கள் எட்;டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் 14 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

 இதே வேளை சித்தி பெற்ற மாணவர்களை அதிபர் சந்தித்து பல்கலைக்கழகத்திற்கு

அனுமதி பெறக்கூடிய பாடங்களை க.பொ.தராதர உயர்தரத்தில் தெரிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இப்பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வித் திணைக்கள உயரதிகாரிகள்

அனைவரினதும் சிறப்பான செயற்பாடுகளே இப்பாடசாலையின் வெற்றிக்குக் காரணமென அதிபர் தெரிவித்தார்.







Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info