Headlines News :
Home » , » காத்தான்குடியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சாஜன்ட் கைது

காத்தான்குடியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சாஜன்ட் கைது

Written By Exams on Saturday, September 7, 2013 | 7:22 AM


காத்தான்குடியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சாஜன்ட் கைதுகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றைக் கையாள்வதற்காக நபர் ஒருவரிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இப் பொலிஸ் சாஜன்ட் இன்று (07) பிற்பகல் வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் முறைப்பாட்டை பதிவு செய்யும் போது பொலிஸ் சாஜன்ட் இலஞ்சம் கோரியுள்ளார். 

மேற்படி பொலிஸ் சார்ஜன்ற் முறைப்பாட்டாளர்களிடமிருந்து இலஞ்சம் பெறுவதாக ஏற்கெனவே இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info