Headlines News :
Home » , » தமிழக விஞ்ஞானிக்கு நாசாவிடமிருந்து அழைப்பு!

தமிழக விஞ்ஞானிக்கு நாசாவிடமிருந்து அழைப்பு!

Written By Unknown on Sunday, October 6, 2013 | 9:15 PM

மாறி வரும் பருவநிலை குறித்து இளம் விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்பதற்கான கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மாணவரான சலீம்கான் கலந்து கொண்டு தனது ஆராய்ச்சி குறித்து விளக்கமளிக்க உள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த, சலீம்கான், சென்னை அண்ணா பல்கலையில் காலநிலை மாற்றத்தினால் உண்டாகும் மாற்றம் மற்றும் கடல்மட்ட உயர்வும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஐ.நா., தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது இளைஞர் மாநாட்டில் பங்கேற்று, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கான ஐ.நா.வின் இளம் விழிப்புணர்வாளர் விருதையும் பெற்றுள்ளார். சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தரங்கில் சலீம்கான் உட்பட உலகிலிருந்து மொத்தம் 40 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info