Headlines News :
Home » , » வாழைச்சேனை தென்னந்தோட்டத்தில் முளைத்த புத்தர் சிலை

வாழைச்சேனை தென்னந்தோட்டத்தில் முளைத்த புத்தர் சிலை

Written By Unknown on Thursday, October 10, 2013 | 1:58 AM

valaichenai_budha_002வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தென்னந் தோட்டமொன்றில், தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் பாசிக்குடா வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
இவரது காணிக்குள் நேற்றுமுன்தினம் அத்துமீறி நுழைந்த வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி புத்தர் சிலையை வைத்துள்ளார் என்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் தெரிவித்தார். பிரித்தானிய ஆட்சியில் லெப்பைத் தம்பி ஹாஜியார் என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட இக்காணி பின்னர் அவரது மருமகனான ஹயாத்து முகம்மது முஹம்மது இப்றாகிம் என்பவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையிலயே புத்தர் சிலை தென்னந்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info