குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக
அபிவிருத்தி பிரிவினரால் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்ற செயல்
திட்டம் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டின் எதிர்கால பிரஜைகளான மாணவர்களுக்கு உண்மையான அறிவையும், சிறந்த
பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டத்தின் கீழ்
ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்கவின்
வழி நடத்தலில் அரங்காற்று கலைகள் ஊடாக இன ஐக்கியத்துக்கான உறவுப் பாலம்
இக்கண்காட்சியில் அமைக்கப்படுகின்றது.
பல மாவட்டங்களில் இருந்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம்......... மாணவர்கள்
வரவழைக்கப்பட்டு அவரவர் கலாசார, பாரம்பரிய, விழுமியங்களை
வெளிப்படுத்துகின்ற கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டு
உள்ளனர்.
.jpg)
.jpg)
Post a Comment