Headlines News :
Home » » போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு 29 பேர் தெரிவு!

போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு 29 பேர் தெரிவு!

Written By sakara on Friday, May 16, 2014 | 7:42 AM

இலங்கை நிருவாக சேவை வகுப்பு 111 க்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்காக 2010இல் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையிலிருந்து 29பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனா. அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழு இவர்களது தெரிவை அங்கீகரித்துள்ளது. மேற்படி பரீட்சையிலிருந்து தெரிவாகும் இரண்டாவது அணி இதுவாகும். இவர்களில் 24 சிங்களவர்களும் 04 தமிழர்களும் 01 முஸ்லிமும் அடங்குவார்கள். கிருஸ்ணபிள்ளை இளங்குமுதன் (காரைதீவு) ரி.யாகோப் அதிசயராஜ் (திருக்கோவில்) எம்.சுலோசனா(யாழ்ப்பாணம்) எஸ்.யோகராஜா (மட்டக்களப்பு) எம்.எ.சி.அகமட் நசீல் ஆகியோரே தெரிவான சிறுபான்மையினராவர். இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை பரீட்சை எடுத்த தடவைகள் உறுதிப்படுத்தல் போன்ற நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் வெகுவிரைவில் நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் என அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info