Headlines News :
Home » , » மருதானை விபச்சார விடுதியொன்றில் மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள் கைது! அதிர்ச்சித் தகவல்!

மருதானை விபச்சார விடுதியொன்றில் மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள் கைது! அதிர்ச்சித் தகவல்!

Written By Exams on Wednesday, September 11, 2013 | 7:12 AM

கொழும்பு, மருதானைப் பகுதியில் புதன்கிழமை விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டபோது கைது செய்யப்பட்ட பெண்களில் அதிகமானோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் வேலைக்கு செல்கின்றோம் என்று சென்றவர்களே இவ்வாறு விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் உள்ள வீடு ஒன்றை நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று குற்றச் செயல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான பொலிஸார் சோதனை செய்த போது 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. கணவர் இவரை கைவிட்டு சென்று விட்டார். நிதித் தேவைகள், வாழ்வாதாரம் போன்றவற்றை நிறைவு செய்கின்றமைக்காக இப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கைதானவர்களில் அநேகர் 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் போன்ற இடங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜாஎலவை சேர்ந்தவர்.

இவர்கள் அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். இந்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு செல்வதானது வேதனைக்குரியமாகவுள்ளது.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info