Showing posts with label வந்தாறுமூலை. Show all posts
Showing posts with label வந்தாறுமூலை. Show all posts
மட்/ வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் வருடாத்த இல்லவிளையாட்டுப் போட்டி நிகழ்வு.
9:42 AMஇன் நிகழ்வானது அதிதிகளை வரவேற்றலுடன் ஆரம்பித்து ஒலிம்பிக் சுடரினை கல்குடா கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளர் திரு.எஜ்.சுபாஜ்சந்திரன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து விளையாட்டுக்கள் நடைபெற்றன. மாணவர்களின் மெய்வலுனர் திறனாய்வு நிகழ்வுகளும், அணிநடை, உடற்பயிச்சி கண்காட்சி பழையமாணவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் பெற்றோருக்கான போட்டிகளும் தொடர்ந்து இடம் பெற்றன.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதி கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார் கௌரவ அதிதி மட்ஃதேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி திரு.எஸ்.இராஜேந்திரன் அசிறப்பு அதிதி கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.நவரெத்தினம் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வில் முதலிடத்தை இளங்கோ இல்லம் தட்டிக்கொண்டது. இல்லங்களுக்கடையில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குரிய பரிசில்கள் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடங்களை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.
Labels:
வந்தாறுமூலை
