Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label வினோதம். Show all posts
    Showing posts with label வினோதம். Show all posts

    உலகை அழிக்க, உலகத்தை நோக்கி வரும் விண்கல்

    1950 டிஏ என்னும் விண்கல் நம் உலகத்தை 2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி உலகை தாக்கும் என கணக்கிட்டுள்ளனர் . ஆனால் அதற்குள் அந்த விண்கல் உலகை தாக்காமல் இருக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்து விடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர் . இந்த 1950 டிஏ விண்கள் 2880 ஆம் ஆண்டு உலகை தாக்க 0.3 சதவீத வாய்ப்புகள் தான் இருக்கிறது . இந்த விண்கல் 1 கிமீ அளவு விட்டம் கொண்டது . ஒரு நொடிக்கு 9 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது . இந்த வேகத்தில் இந்த விண்கல் துகள் துகள்களாக பிரிந்து விட வேண்டும் . ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை . இந்த விண்கல் ஒரு வேளை பூமியை தாக்கினால் 44,580 மெகா தொன் அளவு குண்டு வெடித்தால் என்ன தாக்கம் இருக்குமோ அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் . மேலும் சுனாமியை ஏற்படுத்தும் . உயிர்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் . ஆனால் அதற்குள் இந்த விண்கல்லின் பாதிப்பை தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் .

    இன்று சுப்பர்மூன், பூமிக்கு ஆபத்தா?

    சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை  நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும்.  இதற்கு சூப்பர்மூன் என்று பெயர்.  இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.  பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும்.  சந்திரனின் இந்த மாறுபட்ட இயக்கத்தால் பூமியில் மாற்றங்கள் ஏற்படும் என மத கோட்பாடுகளில் தீவிரமான சிலர் நம்புகின்றனர்.

    நிலவின் இயக்கம் காரணமாக பூமியில் நிலநடுக்க அபாயங்களும், பிளேக் போன்ற உயிர்க்கொல்லி வியாதிகளும் மற்றும் எரிமலை சீற்றங்களும் அதிகரிக்க கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.  பூமியை நெருங்கும்போது வானில் மிக அதிக வெளிச்சம் காணப்படும்.  இதன் தாக்கத்தால், பூமியில் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும்.  பூமியின் அடுக்குகள் இடம் பெயரும்.

    கடல் மட்டங்கள் உயரும்

    பூமியை மாலை 6 மணியளவில் நெருங்கும்பொழுது சந்திரன் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும்.  அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும்.  பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும்.  இதனால் கடல் மட்டங்கள் உயரும் அபாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    பெர்த்தா புயல்

    சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியை நெருங்கும்போது அதிகரிப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.  பூமியில் நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றங்கள் மற்றும் கடந்த 2004 சுனாமி தாக்கம் உள்ளிட்ட சீற்றம் நிறைந்த உயரமான அலைகள் தோன்றும் அபாயமும் உள்ளது.  தற்பொழுது அட்லாண்டா பகுதியில் சுழன்று கொண்டிருக்கும் பெர்த்தா புயல் நாளை இங்கிலாந்திற்குள் நுழைந்து தாக்கம் ஏற்படுத்துவதற்கும் சூப்பர்மூன் தொடர்பு உண்டு என தகவல் தெரிவிக்கின்றது.

    ஈஸ்டர் தீவில் மக்கள் அழிந்தது எப்படி..? சில மர்மங்கள்

    Cading ஈஸ்டர் தீவில் மக்கள் அழிந்தது எப்படி..? சில மர்மங்கள்ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.
    இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
    Easter island1 ஈஸ்டர் தீவில் மக்கள் அழிந்தது எப்படி..? சில மர்மங்கள் Easter island10 ஈஸ்டர் தீவில் மக்கள் அழிந்தது எப்படி..? சில மர்மங்கள்
    கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.
    இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.
    நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.
    உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.
    உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.
    இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    உயிர் விலை தெரியாத “மனிதக்குரங்கு”கள்! (வீடியோ இணைப்பு)

    உயிரின் விலை என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் பதில் உயிர் விலை மதிப்பற்ற மிகப்பெறுமதியான ஒரு விடயம் என்றுதான். ஆனால் அந்த மிகப்பெரிய உயிரின் பெறுமதி தெரியாமல் சில மனிதக்குரங்குகள் காட்டும் வித்தைகளையே நாம் உங்களுக்கு காட்டப்போகிறோம். ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கு 10 மாதங்கள் படாத பாடுபட்டு எவ்வளவோ துயரப்பட்டு பிரசவித்திருப்பாள்.. ஆனால் இந்தக்குரங்கள் உயிர் விலை தெரியாது தாவிக்குதிப்பதை பாருங்கள். மும்பை – சென்னை செல்லும் ரயிலில் ஏறிய இந்த இரு இளைஞர்களையும் மனிதக்குரங்குகள் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும்.
    ஒரு செக்கன் ரயில் போகும் வேகத்தில் தவறிவிழுந்தால் நிலமை என்ன? எத்தனையோ மனிதர்கள் சாதனைக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள்.. இவர்களுக்கு இந்த உயிர் முக்கியமாக இல்லாவிட்டால் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அதில் ஒன்றை முயற்சிக்கலாமே.. இந்த காணொளி தருவதன் நோக்கம் நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு கொண்டு செல்லுங்கள் .. ரயிலில் அல்லது பேருந்தில் தொங்கிய நிலையில் பயணிப்பவர்கள் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.. உங்கள் உயிர் பெறுமதியற்ற பொக்கிசம்.



    காதலியின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட்டு விட்டு தூக்கில் தொங்கிய இளைஞன் (Photos)

    யாழ்ப்பாணம் நீர்வேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினம் நிரூபன் என்கின்ற இளைஞன் காதல் தோல்வியால் எடுத்த முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    காதலித்து ஏமாற்றிய கிருத்திகாவின் 188 படங்களை பேஸ்புக் இல் அல்பமாக ஏற்றி விட்டு, தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார் நிரூபன்.

    யாழின் பிரபல பாடசாலையொன்றின் அதிபரின் மகளான கிருத்திகா ராஜசேகரம் என்பவரே தன்னைக் காதலித்து ஏமாற்றியதாக குறித்த இளைஞர் தனது பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.



    குறித்த பெண் தன்னை மட்டுமல்லாமல் ஏராளமான ஆண்களை காதலித்து ஏமாற்றியதாக தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    பேஸ்புக் இல் எழுதப்பட்டுள்ள தற்கொலைக் குறிப்பில், விக்கி என்பவர் இந்த பிரச்சினையை இப்படியே விட்டு விடும் படியும் அவ்வாறு செய்யாவிட்டால், தனக்குள்ள பொலிஸ் செல்வாக்கை பயன்படுத்தி சிறைக்குள் தள்ளி விடுவேன். என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து.. : ஓர் திகில் செய்தி.!...

    SEX WITH DEAD BODY புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து.. : ஓர் திகில் செய்தி.!தினமும் புதுமையான செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் எமது தளத்தில் இன்று நீங்கள் படிக்கப்போகும் செய்தி உங்களை சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போகிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு திகில் சம்பவம். ஆம்..... 
    தான்சீர் எனப்படும் ஒரு மனிதன் தன்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு பெண் இறந்து புதைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவளுடன் குடும்பம் நடத்திய அதிர்ச்சிகராமான சம்பவமே இது. குறித்த நபர் மருத்துவமனையில் புறஊதாக்கதிர் படிப்பிடிப்பு பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பல நாட்களாக இவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.... 
    அந்த நாட்களில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. குறித்த பெண்னினது உடல் நிலை மோசமாக இறக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் அது தெரிந்தும் அன்பான அவளை தான்சீரால் மறக்க முடியவில்லை. இறுதியில் ஒக்டோபர் மாதம் 25ம் திகதி 1931 ம் ஆண்டு குறித்த பெண் இறந்தார்
    பின்னர் பெண் உடல் மயானத்தில் புதைக்கப்பட்டது. தான் நேசித்தவளின் பிரிவை தாங்காத அவர் தினமும் இரவு நேரமானதும் மயானத்துக்கு சென்று அவளின் கல்லறைக்கு சென்று வந்தார். இப்படியோ 2 ஆண்டுகள் செய்த அவர் பின்னர் அவளின் பிணத்தை ரகசியமாக தோண்டி எடுத்து தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். அழுகிய பிணம் நாறாமல் சதைகள் மேல் மெழுகு பூசி வாசனைத்திரவியங்கள் தடவி பின்னர் அப்பிணத்திற்கு மணப்பெண் ஆடை அணிவித்து தன்னுடன் இருக்கும் படி செய்தார். இவர் பிணத்துடன் “அந்தமாதிரியான” விடயங்களிலும் ஆர்வம் காட்டியதாக பின்னாளில் குறிப்பிடப்பட்டது. இவரது இந்நடவடிக்கைகள் தொடரவே சரியான சமயத்தில் இவர் மாட்டிக்கொண்டார். ... 

    வாழைச்சேனையில் மீனின் வயிற்றுக்குள் பாம்பு

    சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து பாம்பு ஒன்று இருந்த சம்பவம் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கூகுள் தேடுதள ஆபாச இணையத்தள தேடலில் இலங்கை முதலிடம்

    கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
     
    2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
     
    கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன.
     
    இதேவேளை, 2012 ஆம் ஆண்டில் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இளமையாக இருக்க சிறுநீர் அருந்தும் பெண்

    உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கடந்த 20 வருடங்களாக பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறுநீரை காலை பானமாக அருந்தி வருகின்றார்.

    பிரிட்டனைச் சேர்ந்த சில்வியா சென்டலர் என்ற பெண்ணே இவ்வாறு செய்து வருகின்றார்.

    இவர் தினமும் காலை வேளையில் ஒரு கோப்பை சிறுநீரை அருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

    63 வயதுடைய இவர், பார்வைக்கு மிகவும் இளமையானவராகவும் ஆரோக்கியமுடையவராகவும் காணப்படுகின்றார். தனது இளமையான தோற்றத்திற்கு சிறுநீரே காரணமென அவர் உள்நாட்டு சஞ்சிகையொன்றுக்கு கூறியுள்ளார்.

    தனது சிறுநீர் அருந்தும் செயற்பாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக அவர் வைத்தியசாலையில் 

    சிகிச்சைபெற்றுகொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

    இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

    'நான் எனது சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் உள்ளேன். சிறுநீரானது எனது இளமையை பாதுகாக்கின்றது. எனக்கு 62 வயது என்று கூறினால் ஆண்கள்; ஆச்சர்யப்படுகின்றார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.

    'நான் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு கோப்பை சிறுநீரை அருந்துகின்றேன். அது சுவையாகவும் நீரை போன்றும் காணப்படுகின்றது. ஆனால், நீரைவிடவும் இனிப்பாக காணப்படுகின்றது.

    நான் கடந்த 10 வருடங்களாக வைத்தியரை அணுகியதில்லை.  அதேபோல் எனக்கு தடுமலும் ஒருநாளும் ஏற்பட்டதில்லை. அதேபோல் கடந்த 10 வருடங்களாக உடற்பருமனை ஒரே அளவில் வைத்திருக்கிறேன்.

    இதேவேளை இப்பெண், தனது முகத்தையும் தலை மயிரையும் சிறுநீரை கொண்டு கழுவி சுத்தம்செய்வதாக கூறியுள்ளார்.
    பிரிட்டனின் பேர்மிங்கத்தில் மருந்து விற்பனை நிலைய உரிமையாளராக உள்ள மேற்படி பெண் முதலில் சிறுநீரை அருந்துவதற்காக சிரமம்கொண்டதாகவும் பின்னர் பழச்சாறுகளுடன் கலந்து அதனை அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    கூழாவடியில் யானை மரணம்

    கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேரில்லாவெளி - கூழாவடி பகுதியில் யானை ஒன்று ஆபத்தான நிலையில் கடந்த சில தினங்களாக விழுந்து கிடந்தது.

    அரங்கத்திற்கு இறுதி நொடியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த மனிதர்

    இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜூக்கு அதிக மவுசு

    இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜூக்கு அதிக மவுசு பெரும்பாலான சுற்றுலா இடங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. 

    இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சற்று வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. 

    உடலில் மலைப்பாம்புகளை தவழ விடப்பட்டு செய்யப்படும் இந்த மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

    தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் பெருகியுள்ளது, ஏராளமான மக்கள் இந்த மசாஜ் நிலையதிற்கு வந்து குவிகின்றனர். 

    இங்கு பயன்படுத்தப்படும் பாம்புகள் அனைத்தும் விஷத்தன்மை இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது. 

    மீன்மழை பெய்வதற்கான காரணம்

    மழைகாலங்களில் சில பகுதிகளில் மீன்மழை பெய்வது பற்றி அறிந்திருப்பார்கள். ஆனால் அது எவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றி அனேகமானோர் அறிந்திருக்கமாட்டார்கள். இலங்கையிலும் கூட சில பகுதிகளில் மீன்மழை கடந்த காலங்களில் இடம்பெற்றது.

    மாவடிவேம்பில் ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறப்பு

    மாவடிவேம்பில் ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறந்துள்ளன.  மாவடிவேம்பு -01 கிறிஸ்தவ தேவாலய வீதியில் வசிக்கும் ஜெயக்குமார் - றேணுகா ஆகிய தம்பதியினருக்கே இவ்வாறு ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறந்துள்ளன. 

    ஜுரணிக்க முடியாத ஓர் உலகசாதனை….




    தன்னந்தனியாக தன்பாட்டுக்கு சுற்றும் கிரகம்

    தன்னந்தனியாக தன்பாட்டுக்கு சுற்றும் கிரகம்ஒரு கிரகம் தனியாக, துணைக்கு ஒரு நட்சத்திரம் கூட இல்லாமல் தன் பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

    இந்த கிரகம், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ளது. இந்த கிரகத்தைச் சுற்றிலும் எதுவுமே இல்லையாம். அது மட்டுமே மிதந்து கொண்டிருக்கிறதாம். 

    இந்தநிலையில் ஒரு நட்சத்திரம் கூட இல்லாமல், ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் ஆச்சரியத்துடன் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். 

    PSO J318.5-22 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள, மேலும் இந்த கிரகம் முழுக்க வாயுக்களால் நிரம்பியுள்ளது. 

    ஜூபிடர் கிரகத்தை விட 6 மடங்கு அதிக எடையுடன் இது உள்ளது. 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கிரகம் உருவானதாம். எனவே இந்தக் கிரகத்தை புதிதாகப் பிறந்த குழந்தை என்று விஞ்ஞானிகள் செல்லமாக கூறுகின்றனர். 

    இதுகுறித்து ஹவாய் பல்கலைக்கழக ஆய்வுக் குழுத் தலைவர் மிக்கல் லியூ கூறுகையில், இதற்கு முன்பு எந்த ஒரு நட்சத்திரமும் இல்லாமல் தனியாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. எனவே இது வித்தியாசமாக இருக்கிறது. 

    இதன் குண நலன்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த கிரகம் தனியாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது என்றார். 

    மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்....


    நெற்றியில் மூக்கு முளைத்த அதிசய மனிதர்...

    நெற்றியில் மூக்கு முளைத்த அதிசய மனிதர்....
    சீனாவை சேர்ந்த ஜியோலியன்(வயது 22) என்பவருக்கு கடந்தாண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
    இதற்காக அவர் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால், குருத்தெலும்பு முற்றிலுமாக சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது.
    இதனை மருத்துவர்களால் சரிசெய்ய முடியாத காரணத்தால், தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கை உருவாக்க முடிவு செய்தனர்.
    இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது.
    இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


    பாகிஸ்தான் புதிய தீவின் தோற்றத்திற்கான காரணம்

    பாகிஸ்தானில் கடந்த 24 .09.2013 அன்று 7.7 றிச்டர் அளவுத்திட்டத்தில் ஒரு புவிநடுக்கம் தென்மத்திய பாகிஸ்தான் பகுதியில் ஏற்பட்டிருந்தது. இந்தப் புவிநடுக்கத்தினால் பாகிஸ்தானில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது ஒருபுறமிருக்க பாகிஸ்தான் கடற்பகுதியில் புதிதாக ஒரு தீவு தோற்றம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் புதிய  தீவின் தோற்றம் பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

    நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்!!

    அமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள் உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான்.

    1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண்டு விண்களத்தில் "லைகா" என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர்.

    "லைகா" நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது. அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர்.

    அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், "அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்" என்று அமெரிக்கா சவால் விட்டது.



    அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது.

    ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.


    அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.


    அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.


    "ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.

    அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.


    முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.


    நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.



    அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.


    சுற்றிலும் focusலைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.


    நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?


    அன்றைக்கு - அதுவும் 60 - களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info