Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label மட்டு மாநகரசபை. Show all posts
    Showing posts with label மட்டு மாநகரசபை. Show all posts

    2014 யூன் வருமான நிலுவைகளை சேகரிக்கும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனம்

    2014 யூன் மாதத்தினை வருமான நிலுவைகளை அறவீடு செய்யும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகரத்தின் எல்லைக்குட்பட்ட சகல வட்டாரத்திலும் சோலை வரி நிலுவையும் வியாபார மற்றும் வரிகளுமாக சுமார் ரூபா 100 மில்லியன் உள்ளது.

    இதன் முதற்கட்டமாக வரியிறுப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்க துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையினை ஆணையாளர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

    1ம் வாரம் (02.06.2014 – 07.06.2014)
    மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு

    2ம், 3ம் வாரம் (09.06.2014 – 20.06.2014)
    வீடு வீடாகவும் வியாபார நிலையங்களுக்கும் நிலுவை உள்ளவர்களிடம் அறவீடு செய்தல்

    4ம் வாரம் (23.06.2014 – 28.06.2014)
    ஆதனவரி நிலுவைகள் அதிகமாக உள்ள பிரதேசங்களில் மாநகர கட்டளைச்சட்டம் 252வது பிரிவிற்கிணங்க வரியிறுப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக வரி செலுத்த தவறியிருப்பின் அவரது வீட்டில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்கட்டு நடவடிக்கை மூலம் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டு நிலுவை அறவீடு செய்யப்படும்.

    அதேவேளை தொடர்ச்சியாக 10 வருடமாக 10 வீத கழிவுடன் வரி செலுத்திய வரியிறுப்பாளர்களை பாராட்டி கௌரவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

    மட்டு.மாநகரசபையில் சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை ஆரம்பித்துவைப்பு

    மட்டக்களப்பு மாநகர சபை சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களால் 19.05.2014 அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

    இதனைத் தொடர்ந்து சோலை வரி பதிவுகள் மற்றும் அறவீடுகள் அனைத்தும் கணினி மூலம் இலகுவாகவும் மக்களின் நேரத்தை மீதப்படுத்துமுகமாகவும் அமைந்துள்ளது. 

    மேலும், இச்செயற்றிட்டம் எதிர்காலத்தில் இணையதளம் மூலம் சோலை வரி செலுத்தும் நடைமுறையை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.


    மட்டு மாநகர சபையினரால் கல்லடி கடற்கரை துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது

    சுற்றுலா பிரதேசமான கல்லடி கடற்கரை பகுதி மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் இன்று (12.05.2014) மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் துப்பரவு செய்யப்பட்டது. சுனாமி அனர்த்தம் மூலம் மண்ணிற்குள் புதையுண்டிருந்த கட்டட சிதைவுகள் அகற்றப்பட்டதுடன் பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் பற்றைகளும் அகற்றப்பட்டன. மேலும், அப்பகுதி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டு  சுற்றுலாப் பயனிகளுக்கு ஏற்ற வகையில் மேலதிகமாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு கடற்கரை நிலம் குழிகள் இன்றி சீராக்கப்பட்டது.








    மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கான வைத்திய முகாம்

    (VSN)
    மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் மாநகர சபை ஊழியர்களின் உடல் நலன் பேணும் நோக்குடன் மட்-போதனா வைத்தியசாலையின் உதவியுடன் மாநகர மண்டபத்தில் நடாத்தப்பட்ட ஒரு நாள் வைத்திய முகாமில் (07.05.2014) மாநகர ஆணையாளர் உரையாற்றுவதையும் வைத்திய அதிகாரிகளான ஏ.ஏ.எம். புஹைம், திருமதி.ஜி.கௌரிபாலன், வைத்தியர் ஆரணி ஆகியோர் உடல் பரிசோதனை செய்வதையும் மற்றும் ஊழியர்களையும் படங்களில் காணலாம்.




    மட்டு. மாநகர சபையின் எற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் - (போட்டோ)


    முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இன்று 3ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் "நீருற்றுப் பூங்காவில்" இடம்பெற்றன.


    மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்பாக அமைந்துள்ள நீருற்றுப் பூங்கா  வளாகத்தில் நடைபெற்றன.

    மாநகர ஆணையாளர் மா. உதயகுமார், சுவாமி விபுலானந்தர் நாற்றாண்டு விழா சபைத் தலைவர் பேராசிரியர் மா. செல்வராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், சிவில் சமுகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா அகியோர் நீருற்றுப் பூங்கா  வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

    மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளால் ''ஈசன் உவர்க்கும் மலர்கள்' எனும் அடியில் தொடரும் பாட்டு பாடப்பட்டது.

    இதன்போது, சுவாமி விபுலானந்தா அழகிழயற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் சி. எஸ்.  மாசிலாமணி, வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை அதிபர். கே. கனகசிங்கம், சுவாமி விபுலானந்தர் நாற்றாண்டு விழா சபைச் செயலாளர் எஸ். ஜெயராஜா, காசுபதி நடராஜா உடபட பலர் கலந்து கொண்டனர்.

































     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info