Headlines News :

    பார்வையாளர்கள்

    வரலாற்றில் முஸ்லிம் பெண்ணும் இராணுவத்தில் மட்டக்களப்கைச்சேர்ந்த பிரிகேடியர் ரமேஸ் பிரதம அதிதி

    0
    கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் யுவதியொருவர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தில் இணைந்துள்ளார்.
    அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.
    இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில்  நடைபெற்றது.
    இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இராணுவ வீராங்கணைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் 16 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும், அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவு செய்துள்ளனர்.

    ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய சங்கக்கார, மஹேல (Video)

    உலகப் பிரபல்யங்கள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    இதன்படி இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் ஐஸ் பக்கெட் விளையாடியுள்ளனர்.

    இதனையடுத்து ஏஞ்ஜலோ மத்தியூஸ்- அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் மைக்கல் கிளார்க் மற்றும் இந்திய நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மஹேல ஜயவர்தனவினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் குமார் சங்கக்காரவினால் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி- அவுஸ்திரேலிய வீரர் எடம் கிள்க்கிறிஸ்ட் மற்றும் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் ஆகியோருக்கு இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுநல காரியங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்டுவரும் இந்த ஐஸ் பக்கெட் விளையாட்டின் ஊடாக நன்கொடை வழங்கத் தயாராக உள்ளதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

    இது குறித்த காணொளி காட்சிகளை மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

    உலகை அழிக்க, உலகத்தை நோக்கி வரும் விண்கல்

    1950 டிஏ என்னும் விண்கல் நம் உலகத்தை 2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி உலகை தாக்கும் என கணக்கிட்டுள்ளனர் . ஆனால் அதற்குள் அந்த விண்கல் உலகை தாக்காமல் இருக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்து விடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர் . இந்த 1950 டிஏ விண்கள் 2880 ஆம் ஆண்டு உலகை தாக்க 0.3 சதவீத வாய்ப்புகள் தான் இருக்கிறது . இந்த விண்கல் 1 கிமீ அளவு விட்டம் கொண்டது . ஒரு நொடிக்கு 9 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது . இந்த வேகத்தில் இந்த விண்கல் துகள் துகள்களாக பிரிந்து விட வேண்டும் . ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை . இந்த விண்கல் ஒரு வேளை பூமியை தாக்கினால் 44,580 மெகா தொன் அளவு குண்டு வெடித்தால் என்ன தாக்கம் இருக்குமோ அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் . மேலும் சுனாமியை ஏற்படுத்தும் . உயிர்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் . ஆனால் அதற்குள் இந்த விண்கல்லின் பாதிப்பை தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் .

    கிழக்கில் இராணுவப் பயிற்சியை முடித்து வெளியேறிய 35 தமிழ் யுவதிகள்

    இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 35 தமிழ் யுவதிகள் இன்று பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.
    பயிற்சிகளை முடித்துக் கொண்ட தமிழ் யுவதிகளின் அணி வகுப்பு மரியாதை திருகோணமலை 22 வது படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
    பிரிகேடியர் ஆர். சண்முகநாதன் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
    பயிற்சிகளை முடித்து வெளியேறும் தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

    உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

    கொக்கட்டிச்சோலையில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் முறுகல்

    மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. (sr)tm138

    இன்று சுப்பர்மூன், பூமிக்கு ஆபத்தா?

    சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை  நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும்.  இதற்கு சூப்பர்மூன் என்று பெயர்.  இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.  பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும்.  சந்திரனின் இந்த மாறுபட்ட இயக்கத்தால் பூமியில் மாற்றங்கள் ஏற்படும் என மத கோட்பாடுகளில் தீவிரமான சிலர் நம்புகின்றனர்.

    நிலவின் இயக்கம் காரணமாக பூமியில் நிலநடுக்க அபாயங்களும், பிளேக் போன்ற உயிர்க்கொல்லி வியாதிகளும் மற்றும் எரிமலை சீற்றங்களும் அதிகரிக்க கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.  பூமியை நெருங்கும்போது வானில் மிக அதிக வெளிச்சம் காணப்படும்.  இதன் தாக்கத்தால், பூமியில் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும்.  பூமியின் அடுக்குகள் இடம் பெயரும்.

    கடல் மட்டங்கள் உயரும்

    பூமியை மாலை 6 மணியளவில் நெருங்கும்பொழுது சந்திரன் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும்.  அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும்.  பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும்.  இதனால் கடல் மட்டங்கள் உயரும் அபாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    பெர்த்தா புயல்

    சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியை நெருங்கும்போது அதிகரிப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.  பூமியில் நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றங்கள் மற்றும் கடந்த 2004 சுனாமி தாக்கம் உள்ளிட்ட சீற்றம் நிறைந்த உயரமான அலைகள் தோன்றும் அபாயமும் உள்ளது.  தற்பொழுது அட்லாண்டா பகுதியில் சுழன்று கொண்டிருக்கும் பெர்த்தா புயல் நாளை இங்கிலாந்திற்குள் நுழைந்து தாக்கம் ஏற்படுத்துவதற்கும் சூப்பர்மூன் தொடர்பு உண்டு என தகவல் தெரிவிக்கின்றது.

    மட்டக்களப்பு லோகிதரகஜா தீபாகரன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

    மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வரயத்துக்கான சமாதான நீதவானாக மட்டக்களப்பு லோகிதரகஜா தீபாகரன் மட்டக்களப்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா  முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

    இவர் நல்லதம்பி லோகிதராஜா லோகிதராஜா பாக்கியவதி ஆகியோரின் இளைய புதல்வராவார் 

    ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு விஜயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் புனித மிக்கேல் பழைய மாணவரும் பேராதனைப்பல்கலைக் கழகத்தில் கலைமானி (BA) முதுமாணி (MA) டிப்ளோமா பட்டங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அத்துடன் யோகா ஆரோக்கிய இளைஞர் கழக உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்க செயலாளரும் ஏறாவூர் பிரதேச செயலக  அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் இருந்து வருகிறார்.

    பொது இடத்தில் மது அருந்தலாம்: நீதவான்





    பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு  உள்ளதென பூகொட நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான இந்திக கலிங்கவன்ஸ  புதன்கிழமை நீதிமன்றில் கூறினார்.

    மதுவருந்திவிட்டு நடந்து திரிபவர்களை iது செய்ய முடியாது. பிழையான முறையில் நடந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தால் மட்டுமே அவர்களை கைது செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

    பொது இடத்தில் மது அருந்தியமைக்காக நீதிமற்றில் ஆஜர் செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்துவிட்டே நீதவான் இந்திக கலிங்கவன்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு


    இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது.

    இலங்கையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தினூடாக உள்ளூர் விஞ்ஞானிகளால் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

    சிறியதொரு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி, அதன்மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

    'நெனோ செடலைட்' என்று இந்த சிறிய செய்மதி அழைக்கப்படுகிறது. இது இலங்கை விஞ்ஞானிகளின் முழுமையான திறனினால் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், இதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ரொக்கெட்டுக்காக இந்தியா அல்லது சீனாவின் உதவியை நாட வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். 

    இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது

    இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
    தரவரிசையில் இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர்.
    நான்காவது இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் சஜித் பிரேமதாஸ 5ஆம் இடத்திலும் புத்திக பத்திரண 6ஆம் இடத்திலும் அஜித் பி.பெரேரா 7ஆம் இடத்திலும் சுஜீவ சேனசிங்க 8ஆம் இடத்திலும் சுனில் ஹந்துனெத்தி 9ஆம் இடத்திலும் 10ஆவது இடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உள்ளனர்.
    தமிழ்- முஸ்லிம் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 40ஆவது இடத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 84ஆவது இடத்திலும் உள்ளனர்.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் 55ஆவது இடத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா 54ஆவது இடத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் 68ஆவது இடத்திலும் உள்ளனர்.
    இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் 166ஆவது இடத்திலும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் 133ஆவது இடத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் 205ஆவது இடத்திலும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் 168ஆவது பிரஜைகள் முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா 57ஆவது இடத்திலும் உள்ளனர்.
    ஏனைய தமிழ்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பிடித்துள்ள இடங்களும் வருமாறு.

    ஏ.எச்.எம்.அஸ்வர் –  16ஆவது இடம்
    எம்.ஏ.சுமந்திரன் –  31ஆவது இடம்
    எஸ்.சிறிதரன் –  33ஆவது இடம்
    சந்திரகுமார் முருகேசு –  39ஆவது இடம்
    பாக்கியசெல்வம் அரியனேத்திரன் –  44ஆவது இடம்
    ஆர்.யோகராஜன் –  47ஆவது இடம்
    ஹுனைஸ் பாருக் –  87ஆவது இடம்
    பொன்னம்பலம் செல்வராசா –  92ஆவது இடம்
    டி.எம்.சுவாமிநாதன் –  93ஆவது இடம்
    மொஹமட் ஹிஸ்புல்லாஹ் –  94ஆவது இடம்
    எஸ்.யோகேஸ்வரன் –  103ஆவது இடம்
    சுரேஸ் பிரேமச்சந்திரன் –  104ஆவது இடம்
    விநாயகமூர்த்தி முரளிதரன் –  106ஆவது இடம்
    செல்வம் அடைக்கலநாதன் –  120ஆவது இடம்
    ஈ.சரவணபவன் –  123ஆவது இடம்
    சிவசக்தி அனந்தன் –  128ஆவது இடம்
    அப்பாத்துரை விநாயகமூர்த்தி –  137ஆவது இடம்
    சில்வஸ்திரி எலன்டின் –  138ஆவது இடம்
    மாவை சேனாதிராஜா –  139ஆவது இடம்
    பி.ராஜதுரை –  147ஆவது இடம்
    ஹசன் அலி –  171ஆவது இடம்
    அப்துல் காதர் –  172ஆவது இடம்
    விஜயகலா மகேஸ்வரன் –  179ஆவது இடம்
    எம்.எஸ்.தவுபிக் –  191ஆவது இடம்
    எம்.எம்.ஹாரிஸ் –  192ஆவது இடம்
    ஏ.எச்.எம்.பௌசி –  197ஆவது இடம்
    எச்.எம்.ஹலீம் –  198ஆவது இடம்
    வினோ நோகராதலிங்கம் –  200ஆவது இடம்
    பைசர் முஸ்தபா –  203ஆவது இடம்
    பசீர் சேகுதாவூத் –  206ஆவது இடம்
    பைசல் காசிம் –  216ஆவது இடம்
    ஆறுமுகன் தொண்டமான் –  218ஆவது இடம்

    தரப்படுத்தல்படி இறுதி 225ஆவது இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கை நிர்வாக சேவை - SLAS விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

    இலங்கை நிர்வாக சேவை

    Sri lanka Administrative Service - SLAS

    இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிபரீட்சைக்கான வர்த்தமானி அறிவிப்பு 06.06.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பரீட்சையானது இலங்கையின் அதி உயர் உன்னத முதற்தர சேவையாக போற்றப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களும் போட்டியாளர்களும் மிகவும் அதிகம் என்பதால் இப்பரீட்சையின் போட்டித்தன்மை மிக உச்சத்தில் இருக்கும். எனவே தற்போதிருந்தே இப்பரீட்சைக்கு முறையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இன்றிலிருந்தே கற்பதற்க ஆயத்தமாகுங்கள். இலங்கையில் உயர் பதவி வகிக்கும் ஆயிரத்தில் ஒருவனாக நீங்களும் மாறுங்கள்

    இலங்கை நிர்வாக சேவை - தரம் III திறந்த போட்டிப் பரீட்சை, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை என்பனவற்று விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    இலங்கை நிர்வாக சேவை - தரம் III (திறந்த போட்டிப் பரீட்சை)


    • எழுத்துப் பரீட்சை : 5 வினாப்பத்திரங்கள்


    1. பொது விவேகம் 
    2. இலங்கையின் சமூக, பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள்
    3. சர்வதேச போக்குகள்
    4. முகாமைத்துவ விவேகம்
    5. ஆக்கபூர்வ, பகுப்பாய்வு மற்றும் தொடர்பாடல் திறன்கள்


    • விண்ணப்ப இறுதித் திகதி : 07.07.2014


    • பரீட்சைத் திகதி.- 2014 செத்தெம்பர் (கொழும்பு நகரில் நடாத்தப்படும்)
    • நேர்முகப் பரீட்சை : 25 புள்ளிகள் வழங்கப்படும்.

    ஆகக்கூடிய மொத்தப் புள்ளிகளைப் பெறுகின்ற பரீட்சார்த்திகளுக்காக பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். (அனைத்துப் பாடங்களிலும் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்)

    • நியமிக்கப்படவுள்ள ஆட்களின் எண்ணிக்கை : 172 ஆகும்


    • கல்வித் தகைமை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வினால் பட்டத்தினை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிறுவனமொன்றினால் வழங்கப்படும் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல். (Effective date : before 07.07.2014)
    • வயது : விண்ணப்பம் கோரப்படும் இறுதித் திகதியன்று 22 வயதிற்கு குறையாமல் 28 வயதினை அடையாதவராக இருத்தல் வேண்டும். (இறுதித் திகதி : 07.07.2014)
    • வரையறை : திறந்த போட்டிப் பரீட்சையில் (2) தடவைகளுக்கு மேல் தோற்றமுடியாது. 
    • கட்டமைப்பு நேர்முகப் பரீட்சை : 25 புள்ளிகள்

    1. முகாமைத்துவப் பண்பு : 10
    2. தலைமைத்துவப் பண்பு :  05
    3. தொடர்பாடல் திறமை : 05
    4. ஆளுமை : 05

    • சித்தியடைபவர்கள் நியமிக்கப்படும் பதவிகள் :

    செயலாளர் நாயகம், செயலாளர், பிரதிச் செயலாளர், உதவிச் செயலாளர், ஆணையாளர் நாயகம், ஆணையாளர், பிரதி ஆணையாளர், உதவி ஆணையாளர், பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கட்டுப்பாட்டாளர்


    • எழுத்துப் பரீட்சைப் பாடத்திட்டம்.- 

    (1) பொது விவேகம் : 
    (நேரம் : 1 ½ மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா)
    எண் ரீதியான, மொழி ரீதியான மற்றும் உருவ ரீதியான கட்டமைப்புக்கள் மற்றும் இடைத்தொடர்புகள் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்படும் சிக்கல்கள் தொடர்பில் பகுப்பாய்வுத் திறன், தர்க்க விவேகம், பொருள்கோடல் திறன் என்பவற்றை ஏனையவற்றுடன் தாடர்புபடுத்தும் ஆற்றல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பாக பரீட்சார்த்தியிடம் காணப்படும் உளச்சார்பு மட்டத்தினை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

    (2) இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள்
    (நேரம் : 3 மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா, அமைப்புக் கட்டுரை)
    இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் தொடர்பான விடய அறிவு அல்லது பரீட்சார்த்திக்கு முன்வைக்கப்படும் நிலைமைகளுடன் ஆக்கப{ர்வமாகவும் பகுப்பாய்வுடனும் விமர்சன ரீதியாகவும் சிந்தனை செய்யும் ஆற்றல் முன்னுரிமையினைத் தீர்மானிக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்வுகூறும் ஆற்றல் தொடர்பாக பரீட்சார்த்தியின் ஆற்றல்களை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.

    (3) சர்வதேச போக்குகள்.- 
    (நேரம் : 3 மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா, அமைப்புக் கட்டுரை)
    சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் தொடர்பான விடய ஆய்வு அல்லது பரீட்சார்த்திக்கு முன்வைக்கப்படும் நிலைமைகளுடன் ஆக்கப{ர்வமாகவும், பகுப்பாய்வுடனும் விமர்சன ரீதியாகவும் சிந்தனை செய்யும் ஆற்றல் முன்னுரிமையினைத் தீர்மானிக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்வுகூறும் ஆற்றல் தொடர்பாக அல்லது பரீட்சார்த்தியின் ஆற்றல்களை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
    (நேரம் : 3 மணித்தியாலங்கள் - 100 புள்ளிகள்). இவ்வினாப்பத்திரம் அமைப்புக் கட்டுரை மற்றும் கட்டுரை வினாக்கள் மற்றும் பல்தேர்வு வினாக்கள், சுருக்க வினாக்கள்

    (4) முகாமைத்துவ விவேகம்.- 
    (நேரம் : 3 மணித்தியாலம் - 100 புள்ளிகள், - பல்தேர்வு வினா, சுருக்க விடைகளுக்கான வினா)
    சிக்கல்களையும் அவற்றிற்கான காரணங்களையும் கண்டறிதல், தீர்மானங்களை மேற்கொள்ளல், ஆளிடைத் தொடர்புகளைப் பேணுதல், தொடர்பாடல் திறன், சுய ஒழுக்கநெறிக் கொள்கைகள், உபாய மார்க்கங்களை வகுத்தல் என்பவற்றில் பரீட்சார்த்தியின் ஆற்றலையும் மற்றும் கருத்துரு மற்றும் புலமை அம்சத்திலுள்ள பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகளின் சூழமைவில் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பரீட்சார்த்தியின் ஆற்றலையும் அளவிடுவதற்காக இவ்வினாப்பத்திரம் வடிவமைக்கப்படுகின்றது.


    (5) ஆக்கப{ர்வமான பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்கள்.- 
    (நேரம் : 3 மணித்தியாலங்கள் - 100 புள்ளிகள்)
    தரப்பட்ட தலைப்புக்கள் / மையக் கருத்துக்களிலிருந்து பரீட்சார்த்தியினால் தெரிவுசெய்யப்படும் தலைப்பு / மையக்கருத்து என்பவற்றினூடாக கருத்துக்கள் மற்றும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல், கோப்புப்படுத்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பாக பரீட்சார்த்தியின் தர்க்கிக்கும் ஆற்றல் மற்றும் கற்பனை சக்தி என்பவற்றை அளவிடுவதோடு சிக்கலான பந்தியொன்று, ஆவணமொன்று அல்லது விஞ்ஞாபனமொன்றினை  விளங்கிக்கொள்ளல் மற்றும் அதன் கருப்பொருளினை சொந்த வசன நடையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் மற்றும் சரியான முறையிலும் தெரிவிப்பதற்கான பரீட்சார்த்தியின் ஆற்றலை அளவிடுதல் இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


    இலங்கை நிர்வாக சேவையில் இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
    ஆண்டு
    சிங்களவர்
    தமிழர்
    சோனகர்
    மொத்தம்
    2009
    90
    0
    1
    91
    2011 (2012)
    244
    15
    11
    270
    2012 Dec
    0
    30
    14
    44
    2013
    108
    2
    3
    113
    2014(limited)
    24
    4
    1
    29
    கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம்
    (85.2%)466
    (9.3%)51
    (5.5%)30
    547



     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info